districts

img

ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் கோரமண்டல் விரைவு ரயில் மோதி பயங்கர விபத்து

ஒடிசா, ஜூன் 2-

    கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோர  மண்டல் ரயில், ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோர மண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலா சூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர்.

    இந்த ரயில் விபத்தில், 7க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரி விக்கின்றன. தடம் புரண்ட ரயிலுக்குள் பயணிகள் பலர் சிக்கியுள்ள நிலையில், இரவு நேரம் என்பதால் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர்.

   ரயில் விபத்து நடந்த பகுதியில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிய 67882 62286 அவசர கால கட்டுப்பாட்டு அறை எண் வெளியிடப்பட்டுள்ளது.

   ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இதுவரை 6 பேர் உயி ரிழந்ததாக தகவல் வெளி யாகியுள்ளது. மேலும், விபத்தில் காயமடைந்த 50க்கும் மேற்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.