திருப்பத்தூர், ஜூலை 3- ஒன்றிய அரசின் அக்னிபாத் ஒப்பந்தமுறையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் தியாக மூர்த்தி தலைமையில் ஞாயிறன்று (ஜூலை 3) திருப்பத்தூர் தாலுக்கா மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அமைப்பாளர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். இதில் கேசவன் (சிஐடியு) கேசவன், ரவி (பிஎஸ்என்எல்இயு) மற்றும் காமராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பார்த்திபன் நிறைவுரையாற்றினார். இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகிகள் b ஜகநாதன் வேலவன், தர்மேந்திரன், லோகேஷ் ,சதீஷ் விஷ்ணு, விக்னேஷ், வாசு, பகவதி ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில அரசு அலுவலங்களில் காலியாக உள்ள பணியிடங்களை திமுக அரசு நிரப்பவேண்டும், தேசிய புதிய கல்விக்கொள்கையை கைவிடவேண்டும், இந்தி திணிப்பை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.