districts

ஒப்பந்த தொழிலாளர் ஊதியத்தை உத்தரவாதப்படுத்த சிஐடியு கோரிக்கை

கல்பாக்கம், மார்ச் 24 – கல்பாக்கம் அட்டாமிக் எனர்ஜி கான்ட் ராக்ட் ஒர்க்கர்ஸ் லேபர் யூனியன் ஆண்டு  பேரவை மற்றும் ஒப்பந்த தொழிலாளர்க ளின்  கோரிக்கை மாநாடு சதுரங்கப்பட்டி னம் பேருந்து நிலையம் அருகில் புதனன்று (மார்ச் 23)  நடைபெற்றது.   சங்கத்தின் தலைவர் க.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்  மாவட்டத் தலைவர் சி.செல்வக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.தனபால்,  முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர் சி.ஆர்.பெருமாள், மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மோகனா மதன்குமார், சுமதி  ஏழுமலை, ஆர்த்தி பாஸ்கர் ஆகியோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து  சிஐடியு மாவட்ட செயலாளர் க.பகத்சிங் தாஸ் பேசினார். மாநாட்டில் பங்கேற்ற சுற்று வட்டார ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப் பில் முன்னுரிமை வழங்க வலியுறுத்தும் தீர்மானம் ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் இயற்றித் தருவதாக உறுதியளித்தார்.

தீர்மானங்கள்
குறைந்தபட்ச ஊதியமாக அணுமின் நிறு வனங்கள் வெளியிட்டுள்ள ஆணைப்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியத் திணை உத்திரவாதப்படுத்த வேண்டும், சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட 8 பொது சேவை நிறுவன பம்ப்  ஆபரேட்டர்களுக்கு உதவி தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தலின் படி உடனடியாக  வேலை வழங்க வேண்டும், வேலை மறுக்கப்பட்ட காலத்திற்கு சம்பளம் வழங்க  வேண்டும், சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட மேப்ஸ் விருந்தினர் மாளிகை யில் பணிசெய்த 8 பெண் தொழிலாளர்க ளுக்கு சம்பளத்துடன் வேலை வழங்க வேண் டும், வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்படாத ஒப்பந்த பணியாளர்களுக்கு உடனடியாக 2019 முதல் பிடித்தம் செய்திட வேண்டும், இஎஸ்ஐ வசதியை உருவாக்க வேண்டும் 35 ஆண்டுகளாக தொடர்ந்து கதிர்வீச்சு பகுதிக ளில் வேலை செய்துவரும் தொழிலாளர் களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

புதிய நிர்வாகிகள்
சங்கத்தின் சிறப்பு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தலைவராக எஸ்.கண்ணன், செயல் தலை வராக க.பழனிசாமி, பொதுச் செயலாளராக க.பகத்சிங் தாஸ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.