தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வெள்ளியன்று (மார்ச் 29) வேளச்சேரி பகுதியில் வாக்கு சேகரித்தனர். திமுக பகுதிச் செயலாளர் துரை கபிலன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி உள்ளிட்டு கூட்டணி கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.