திருவள்ளூர், ஏப். 13- திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி யில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கும்மிடிப் பூண்டி பகுதியில் வெள்ளியன்று (ஏப் 12) வாக்கு சேகரித்தார். ஈகுவார்பாளையம் கிராமத்தில் கூட்டணிகட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதையடுத்து சாணாபுத்தூர், சூரப்பூண்டி, ஏடூர், நத்தம், வழுதலம்பேடு, ரெட்டம்பேடு, பன்பாக்கம், கீழ்முதலம்பேடு, பெருவாயல், பாலேஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்குகளை சேகரித்தனர். இந்த பிரச்சாரத்தின் போது ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு வேட்பாளர் சசிகாந்த் செந்திலை சரவெடி மற்றும் மலர் மாலையுடன் வரவேற்று கை சின்னத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இதில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், எம்எல்ஏ, பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், திமுக மாநில நிர்வாகி சி.எச்.சேகர், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஏ.ஜி.கண்ணன், கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார், வட்ட குழு உறுப்பினர்கள் லோகநாதன், ஜோசப், சிவகுமார், ரவி, விசிக மாவட்ட செயலாளர் நீலமேகம், காங்கிரஸ் மாவட்ட நிரவாகி சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.