விழுப்புரம்,பிப்.14- விழுப்புரம் மாவட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டத்திற்குட்பட்ட தைலாபுரம் அரசுப் பள்ளியில் பயின்று, நீட் தேர்வை எதிர் கொண்டு, தற்போது மருத்துவம் பயில அண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவி தேவியை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வி.அர்ஜூனன், வட்டக் குழு உறுப்பினர்கள் ஐ.சேகர், கே.சுந்தரமூர்த்தி, ஜி.ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.