ராணிப்பேட்டை, மே 21-
ராணிப்பேட்டை கலால் காவல் துறையினர் முத்துக் கடையில் இருந்து மாந்தாங்கல் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழி யாக வந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி னர். அவர்களிடம் சோதனை நடத்திய போது போதையை ஏற்படுத்தக்கூடிய 300 மாத்திரைகள் வைத்தி ருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போதை மாத்திரைகள் வைத்தி ருந்த ராணிப்பேட்டை நவல்பூரை சேர்ந்த பால் சுனில் (23), ராணிப்பேட்டை முகமது சுனில் (19), தனுஷ் (19) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.