திருவள்ளூர், பிப் 8- நெல் கொள்முதல் நிலையங்களை தனி யாருக்கு வழங்கும் உத்தரவை, மோடி அரசு திரும்ப பெற வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமையன்று (பிப் 8), கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் எம்.ரவிக்குமார் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், மாவட்டக்குழு உறுப்பினர் வாசுதேவன் வட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், துணைத் தலைவர் பி.கருணாமூர்த்தி, விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் வட்டத் தலைவர் இ.ராஜேந்திரன், சிபிஎம் வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.