districts

img

ஓய்வூதியர் சங்கத் தலைவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

கடலூர் வெளி செம்மண்டலம் குறிஞ்சி நகர் மைதானத்தில் முறைகேடாக மணல் எடுக்க முயற்சித்த அரசு ஒப்பந்ததாரரை தட்டி கேட்ட ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் டி. புருஷோத்தமன் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்கங்களின் மாநில செயலாளர் ஆர். மனோகரன், மாவட்டச் செயலாளர் கோ.பழனி, பல்வேறு ஓய்வூதியர் சங்கங்களின் மாவட்ட தலைவர்கள் இராம. வெங்கடாஜலபதி, எஸ்.பாலகிருஷ்ணன், என். காசிநாதன், குடியிருப்போர் சங்கத்தின் சிறப்பு தலைவர் எம்.மருதவாணன் சிபிஎம் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பால்கி, பொருளாளர் சி.குழந்தைவேலு உள்ளிட்ட பலர் பேசினர்.