பாலஸ்தீனம், லெபனான், சிரியா ஆகிய நாடுகளில் இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் அரசின் பயங்கரவாதத்தை கண்டித்து திங்களன்று (அக்.14) சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா, விசிக பொதுச்செயலாளர் து.ரவிக்குமார் எம்பி, துணைப்பொதுச் செயலாளர்கள் வன்னியரசு, ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பேசினர்.