செங்கல்பட்டு, ஏப். 22- டெல்லியில் விவசாயிகள் சங்கம், சிஐடியு சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கெடுக்க கடந்த ஏப்ரல் 5 அன்று சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சிபிஎம் மூத்த தோழர் வேதகிரியின் படத்திறப்பு புகழஞ்சலி கூட்டம் வெள்ளியன்று (ஏப்.21) கட்சியின் செங்கை பகுதி குழு உறுப்பினர் கே.வேலன் தலைமையில் செங்கல்பட்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயினார், மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, அனைத்து துறை அரசு ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் என்.எல்.சீதரன், மா.ச.முனுசாமி (முன்னாள் ஆசிரியர்கூட்டணி), வி.அரிகிருஷ்ணன், என்.சாரங்கன் (விச), பி.சண்முகம் (விதொச), டி.பூங்குழலி (அரசு ஊழியர்சங்கம்), ரவிச்சந்திரன்(ஊரகவளர்ச்சித்துறை), கலைச்செல்வி (சிஐடியு), ஜி.ஜெயந்தி (மாதர்சங்கம்), பி.பன்னீர்செல்வம், ஓ.செல்வமணி, வி.பொன்னுசாமி(ஓய்வுபெற்றஅரசுஊழியர்சங்கம்), ஒய்.சீதாராமன் (மத்திய மாநில ஓய்வூதியர்சங்கம்), அருணாசலம் (மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம்), மு.முத்திருளப்பன் (ஓய்வூதியர்சங்கம்), மு.முனிச் செல்வம்(தமுஎகச), ஞானசம்பந்தன் (அஞ்சல்ஓய்வூதியர்), டி.பாபு (கட்டுமானசங்கம்), என்.அன்பு (சிபிஎம்) உள்ளிட்ட பலர் புகழஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்வில் மறைந்த தோழர் கே.வேதகிரியின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.