அம்பத்தூர், அக். 22- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான வி.ராதா கிருஷ்ணன் (102) புகழஞ்சலி கூட்டமும், கவிஞர் கே.ஜீவபாரதி எழுதிய “தியாக யாத்திரை” நூல் வெளியீட்டு விழாவும் அம்பத்தூரில் ஞாயிறன்று (அக். 22) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் அம்பத்தூர் நகரச் செயலாளர் இரா.விஜயகுமார் தலைமை தாங்கினார். ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் இரா.துரைசாமி வரவேற்றார். ஜனசக்தி ஆசிரியர் டி.எம்.மூர்த்தி பேசுகையில், கோவை சதி வழக்கில், விசாரணைக்காக 19 வயதில் தோழர் ராதாவை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். ஆனால் ராதா வின் சாமர்த்தியமான பதிலால் நீதிபதி அவரை விடுவித்து விடுகிறார். அப்போது பி.ராமமூர்த்தியால் அடை யாளம் காணப்பட்டு அங்கிருந்து தன்னுடைய 20 வயதில் ஜனசக்தியில் முழுநேர ஊழியராக ராதா பணியில் சேர்ந்தார். தோழர் ராதா சிறந்த பத்திரி கையாளர் மட்டுமல்ல. இந்தியத் தலைவர்கள் பலருடைய மேடை உரையை தமிழில் மொழி பெயர்த்து வழங்கியவர். அவரது மொழி பெயர்ப்பு பல இளைஞர்களை ஈர்த்துள்ளது. அவர் தனது 100 வயது வரை தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். தான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டது போலவே, அவரது 3 பெண் குழந்தைகளுக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தார். அவர் எந்த லட்சியத்திற்காக பாடு பட்டாரோ அந்த லட்சியம் ஈடேற பாடுபடு வோம். சாதியற்ற சமூகம் படைப் போம் என்று மூர்த்தி கேட்டுக் கொண்டார். இதில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்ட லக் குழு தலைவர் பி.கே.மூர்த்தி, ஏ.ஜி.சிதம்பரம் (காங்கிரஸ்), சிபிஐ மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர், எல்.டி.யு.சி. மாநிலத் தலைவர் ஏ.எஸ்.குமார், தமிழர் எழுச்சிக்குரல் ஆசிரியர் அ.பத்மநாபன், சுப.தென்பாண்டியன் (மனித உரிமை மக்கள் கூட்டணி), எம்.கமல் (86ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்), வழக்கறி ஞர் ராஜேஷ், எஸ்.சண்முகநாதன் (என்.சி.பி.எச்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக “தியாக யாத்திரை” நூலை சிபிஐ மாநிலக் குழு உறுப்பி னர் டி.லெனின் வெளியிட குழந்தை நல மருத்துவர் எம்.மனோகரன் பெற்றுக் கொண்டார். நூலாசிரியர் கே.ஜீவ பாரதி ஏற்புரை வழங்கினார். பாவை பப்ளிகேஷன்ஸ் பொது மேலாளர் ஆ.சிவக்குமார் நன்றி கூறினார். இதில் மருத்துவர்கள் ஆர்.சாந்தி, எம்.சுவாதி, கீதா, பாரதி, ராமலிங்கம், மனோஜ்குமார் சப்ததி, பி.மாரியப்பன் (ஏஐடியுசி), என்.கோபிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.