districts

img

தோழர் வி. முருகையன் மனைவி காலமானார்

சென்னை, மார்ச் 5- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட சென்னை முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் வி.முருகையன் மனைவி நாகம்மாள் சனிக்கிழமை (மார்ச் 4) காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராம கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம்,  மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்திஷ்குமார், மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா. முரளி, திருவிக நகர் பகுதிச்செயலாளர் வி.செல்வராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பா.தேவி,உள்ளிட்ட தலை வர்கள்  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர். பின்னர் அவரது உடல் ஞாயிறன்று (மார்ச் 5) நியூ ஆவடி சாலையில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.