districts

img

தோழர் செல்வரத்தினம் காலமானார்

அம்பத்தூர், ஏப். 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமுல்லைவாயில் உறுப்பினர் தோழர் செல்வரத்தினம் (67) புதன்கிழமை காலமானார். போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய போது, தன்னை சிஐடியுவில் இணைத்துக் கொண்டு தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்தார். பின்னர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியில் இணைந்து களப்பணியாற்றினார். ஓய்வு பெற்ற பிறகும் குடியிருக்கும் திருமுல்லைவாயில் பகுதியில் மக்கள் பிரச்சனைகளுக்காக தனது இறுதிமூச்சு வரை குரல் கொடுத்தார். அவருடைய உடலுக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன், தொகுதி செயலாளர் அ.ஜான், நிர்வாகிகள் மோகன், ராமமூர்த்தி, சந்திரசேகர், அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் கர்சன், நிர்வாகி வீரராகவன், மாவட்டத் தலைவர் குருசாமி, நிர்வாகிகள் ஆதிமூலம், முத்துக்குமார், ஏழுமலை, முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் வியாழக்கிழமை மதியம் (ஏப். 2) திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது.