districts

img

தோழர் சா.செல்வசுந்தரத்தின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு

இந்திய ராணுவ முன்னாள் வீரர் தோழர் சா.செல்வசுந்தரத்தின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிறன்று (டிச.18) பல்லாவரத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உருவப் படத்திற்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.நரசிம்மன், எம்.தாமு, ஜி.விஜயலட்சுமி எம்.சி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.