சென்னை, ஜன. 7 - அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செய லாளர் தோழர் எஸ்.பக்தவச்சலு உடல் செவ்வாயன்று (ஜன.7) நாதமுனி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு வயது 72. 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்க முன்னணி ஊழியராக பணி யாற்றி வந்த தோழர் எஸ்.பக்தவச்சலு, சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று செம்மையாக செயல்பட்டவர். பதிலி தொழிலாளர்கள் (சிஎல்) வழக்கு, குறைந்தபட்ச கூலி வழக்கு போன்றவற்றை நடத்தி வெற்றிபெறுவதில் முன்னின்றார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். பணி ஓய்வுக்கு பிறகும், சங்கத்தில் துணைத் தலைவராக பொறுப்பேற்று, விசாரணைக்கு உள்ளாகும் ஊழியர்களுக்கு வழிகாட்டி வந்தார். தொழிற்சங்க பணிகளை தொய்வின்றி செய்தார். வில்லிவாக்கம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியராகவும் இருந்தார். உடல் நலக்குறைவால் திங்களன்று (ஜன.6) அன்று காலமானார். வில்லிவாக்கம் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், பொருளாளர் சசிக்குமார், மூத்த தலைவர் எம்.சந்திரன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை, பொதுச்செயலாளர் வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் செந்தொண்டர் அணிவகுப்புடன் ஊர்வலமாக சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.கார்தீஸ்குமார் (வடசென்னை), ஆர்.முரளி, எஸ்.கே.முருகேஷ், கே.முருகன் (மத்தியசென்னை), ஜி.செந்தில்குமார், ச.லெனின் (தென்சென்னை), வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன், ஆ.பிரியதர்ஷினி எம்.சி., சிஐடியு தென்சென்னை மாவட்டச் செய லாளர் பா.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கே.கர்சன், நிர்வாகிகள் கே.வீரராகவன், முத்துக்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் செந்தொண்டர் அணிவகுப்புடன் ஊர்வல மாக கொண்டு செல்லப்பட்டு நாதமுனி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.