தோழர் பூரணச்சந்திரன் காலமானார் திருவள்ளூர், டிச 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னேரி பகுதி குழு உறுப்பினராக செயல்பட்ட தோழர் ஜி.பூர்ணசந்திரன் (வயது 63), உடல் நிலை பாதிக்கப்பட்டு வியாழனன்று இரவு காலமானார். கட்சியின் பகத்சிங் நகர் கிளைச் செயலாளராகவும், திருவள்ளூர் மாவட்ட கட்டு மான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவராகவும் பொன்னேரி பகுதி செயலாளராகவும் பணியாற்றிவர். அவரின் உடலுக்கு கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.எம்.அனீப், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஏ.கலாம், கட்டுமான சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.நாகராஜன், பொருளாளர் லட்சுமணன், சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் தொலை பேசி மூலம் இரங்கலை தெரிவித்தார். மறைந்த தோழர் பூர்ணசந்திரனுக்கு குமாரி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். பூர்ணசந்திரன் உடல் பகத்சிங் நகரில் உள்ள மயானத்தில் வெள்ளியன்று அடக்கம் செய்யப்பட்டது.