மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிக்கரணை கிளை மூத்த உறுப்பினர் தோழர் எம்.பரசுராமன் படத்திறப்பு நினைவேந்தல் கூட்டம் சனிக்கிழமையன்று (மே 4) அவரது இல்லத்தில் நடைபெற்றது. சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் படத்தை மூத்த தலைவர் டி.ராமன் திறந்து வைத்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் கே.வனஜகுமாரி, ச.லெனின், டி.சுந்தர், தோழர் பரசுராமனின் மனைவி கலாவதி, மகள்கள் ரம்யா, பாவெல், தமிழரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.