மாமேதை லெனின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி சிபிஎம் புதுச்சேரி மாநிலக்குழு அலுவலகத்தில் ஞாயிறன்று (ஜன.21) மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமையில் நினைவு தின கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எழுத்தாளர் அன்வர் உசேன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதேப்போல் புதுச்சேரி நகரம், உழவர்கரை நகரக்குழு, மண்ணாடிப்பட்டு, பாகூர், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் மாமேதை லெனினின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் உழவர்கரை நகரக்குழு சார்பில் பெத்துசெட்டிப்பேட்டையில் மாமேதை லெனின் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.