சுதந்திர போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான மறைந்த தோழர் கே.ஆர்.சுந்தரம் 17ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் காட்பாடி வட்டச் செயலாளர் ஆர்.சுடரொளியன் தலைமையில் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.சீனிவாசன், வட்டக்குழு உறுப்பினர்கள் கணேஷ், தருமன், கோவர்த்தனன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.