districts

img

தோழர் கோ.வீரய்யன் 5-ஆவது நினைவுதினம் சித்தாடி கிராமத்தில் செவ்வணக்க நிகழ்வு

திருவாரூர், நவ.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலைவராக விளங்கி யவரும், களப்போராளியுமான தோழர் கோ. வீரய்யனின் ஐந்தா மாண்டு நினைவேந்தல் சனிக்கிழமை யன்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சித்தாடி கிராமத்தில் உள்ள கோ.வீரய்யனின் நினைவிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தர மூர்த்தி தலைமை வகித்தார், குட வாசல் தெற்கு பகுதி ஒன்றிய செயலா ளர் எம். கோபிநாத், குடவாசல் நகரக்  குழு செயலாளர் டி.ஜி. சேகர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.  நாகராஜன், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செய லாளர் சாமி. நடராஜன்,  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப்  பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங் கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். தம்பு சாமி, மாவட்டச் செயலாளர் எம். சேகர், விவசாயத் தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் பி. கந்தசாமி, மாவட்டப் பொருளாளர் ஆறு. பிர காஷ், சிபிஎம் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெய பால் மற்றும் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். கலைமணி, கே.ஜி. ரகுராமன், மாவட்  டக் கவுன்சிலர் ஜெ. முகமது உது மான் மற்றும் மாவட்டக் குழு உறுப்பி னர்கள், ஒன்றிய-நகரக் குழு உறுப்பி னர்கள், வர்க்க - வெகுஜன அரங்க  நிர்வாகிகள் பங்கேற்று செவ்வணக் கம் செலுத்தினர். தோழர் கோ. வீரய்யனின் 5-ஆம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  மாவட்டம் முழுவதும் அவரின் உரு வப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.