வேலூர், ஆக 6- வேலூர் மாவட்டம், குடியாத்தம் ராஜா குப்பம் பகுதியைச் சார்ந்த சிபிஎம் மூத்த உறுப்பினரும் ஒன்றுபட்ட குடியாத்தம் தாலுகாக்குழு உறுப்பின ரும், ராஜா குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்னாள் தலைவருமான டி.ராஜகோபால் செவ்வாயன்று (ஆக 6) காலமானார். அவரது உடலுக்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன், பேரணாம்பட்டு தாலுகா செயலாளர் சி.சரவணன், குடியாத்தம் தாலுகா செயலாளர் எஸ்.சிலம்பரசன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.குண சேகரன், மூத்த உறுப்பினர் சி.எம்.நடராஜன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி நிகழ்ச்சி புதனன்று (ஆக 7) ராஜா குப்பம் இடுகாட்டில் நடைபெற உள்ளது.