திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த ராமசாமி குப்பம் பகுதியில் சிபிஎம் மற்றும் சிஐடியு சங்கத்தில் நிர்வாகியாக செயல்பட்டு வந்த தோழர் எஸ். பாலசுந்தரம் கடந்த ஜூலை மாதம் காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று (செப்.29) நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், ப. செல்வன்,சிஐடியு நிர்வாகிகள் இரா.பாரி, எஸ். முரளி, சிபிஎம் வட்டார செயலாளர் ரமேஷ் பாபு மற்றும் நிர்வாகிகள் அ. உதயகுமார், சி. அப்பாசாமி, பெ. கண்ணன், அ. சேகர், கே.கே.வெங்கடேசன், ச. குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.