வேலூர். நவ.19- தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தோழர் ஏ.ஞான சேகரன் சனிக்கிழமையன்று (நவ.18) உடல்நலக்குறைவால்(வயது69) கால மானார். இந்நிலையில் திருப்பத்தூர் அடுத்த கதிரிமங்கலம் கிராமத்தில் உள்ள அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி மாலை அணிவித்து செங்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.சாமிநாதன், பி.காத்தவராயன், தாலுகா செயலாளர் எம்.காசி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜாபர் சாதிக், வட்டக்குழு உறுப்பினர்கள் சி.கேசவன், ஜி.ரவி, எஸ்.காமராஜ், வி.சிங்காரம்,ஆர்.ரங்கன், ஏகாம்பரம் (சிஐடியு), அப்பாதுரை, கரிசித்தன்(விச), செல்வம்(எல்ஐசி), ஞான சேகரன்(ஆசிரியர்), நேரு(அரசுஊழியர்), குப்புலிங்கம்(பிஎஸ்என்எல்), வெங்க டேசன், கோவிந்தராஜ்(வாலிபர் சங்கம்) உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தினர். மறைந்த தோழர் ஞானசேகரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பத்தூர் தாலுகா செயலாளராகவும், வேலூர்-திருப்பத்தூர் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர்.