districts

img

ஊர்க்காவல் படை வீரர்களுக்கான பயிற்சி நிறைவு

கடலூர், ஆக. 31- கடலூர் மாவட்டத்தில் ஊர்க் காவல் படையில் பணி புரிவதற்கு 33 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்க ளில் 23 பேருக்கு ஊர்க் காவல் படை பயிற்சியும், 10 பேருக்கு கடலோர காவல் குழுமத்தில் பணி புரி வதற்கான பயிற்சியும் கட லூர் ஆயுதப்படை மை தானத்தில் நடைபெற்றது. கடந்த 45 நாட்களாக இவர்களுக்கு அடிப் படைக் கவாத்து, நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப் பட்டன. இந்த பயிற்சியின் நிறைவு விழா ஊர்க்காவல் படை விழுப்புரம் சரக உதவி தளபதி கேதர் நாதன் தலைமையில் வியா ழனன்று (ஆக. 31) நடை பெற்றது. வட்டார தளபதி அம்ஜத் கான் வரவேற்றார். கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் கலந்து கொண்டு, பயிற்சி முடித்த ஊர் காவல் படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட திரு நங்கை உள்ளிட்ட மூன்று பேருக்கு பதக்கங்களை அணிவித்து கவுரவித்தார். பின்னர் எஸ்.பி ராஜா ராம் பேசுகையில், ஊர்க் காவல் படையில் சிறப்பாக பயிற்சி பெற்றுள்ள நீங்கள் காவல் சீருடை அணிவது மிகவும் பெருமையான விஷ யம். அதற்குரிய மரியாதை யுடன் நடந்து கொள்ள வேண்டும். நாம் பணிபுரி யும் நிறுவனத்திற்கு எந்த ஒரு அவப்பெயரும் வரா மல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுமக்களி டம் மிகவும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார். இதில் ஆயுதப்படை ஆய்வாளர் அருள் செல்வன், ஊர் காவல் படை வட்டார துணை தளபதி கலாவதி, எஸ்பி யின் செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.