districts

வணிக சிலிண்டர் விலை உயர்வு: இட்லி, தோசை, காபி விலை உயர்வு

சென்னை,மே 5- பெட்ரோல்-டீசலை போலவே கியாஸ் விலையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு  சிலிண்டர் விலை ரூ.1300 ஆக குறைந்தது. தற்போது ரூ.2500 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஓட்டல் தொழிலை கடுமையாக பாதித்து உள்ளது. உணவு பண்டங்கள் அனைத்தின் விலையும்  5 முதல் 7 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளன. ரூ.115க்கு  விற்ற சமையல் எண்ணெய் ரூ.200 ஆகி விட்டது இறக்குமதி யாகும் எண்ணெய் விலை கடுமையாக உயர்கிறது என்றால்,  உள்ளூர் உற்பத்தியான நெய் விலை கூட உயர்கிறது. உதாரணமாக காலை  தோசை கல்லை சூடாக்கினால் தொடர்ந்து இரவு வரை கியாஸ் அடுப்பு எரிந்து கொண்டே இருக்க வேண்டும். 150 டிகிரி முதல் 200 டிகிரி வரை வெப்பம்  குறையாமல் இருந்தால்தான் தோசை சுட முடியும். என்ற  நிலை உள்ளதால் ஓட்டல்தொழிலிலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.