மான்டஸ் புயல் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டார்மடத்தில் உள்ள புயல் பாதுகாப்பு சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களை வெள்ளியன்று (டிச. 9) நேரில் சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, மருத்துவ வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.