விழுப்புரம்,ஜூலை 20-
விழுப்புரம் நக ராட்சிக்குட்பட்ட சாலா மேடு பகுதியில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் குழந்தைகள் இல்லத்தை மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பராமரிக்கபடும் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் சமையலறை, கல்வி கற்பிக்கும் வகுப்பறை, படுக்கையறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு குழந்தை களிடம் கலந்து ரை யாடினார். சமூக நலத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.