districts

img

கிள்ளைக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர்: மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

சிதம்பரம், மார்ச் 17- கிள்ளை பேரூராட்சி மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பேரூராட்சித் தலைவர்கள் கடலூர் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் தேர்தலில் மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற  கிள்ளை பேரூராட்சி யின் தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, சி. மானம்பாடி, சிங்காரகுப்பம் கிராமத்தில் பட்டா இல்லாதவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். பேரூராட்சி முழுவதும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். இதுகுறித்து தமிழக வேளாண் துறை அமைச்சருடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.