districts

வண்டலூர்-மீஞ்சூர் சுங்கச்சாவடிகளில் வசூல் தொடங்கியது

  சென்னை,ஜன.10- சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை  60 கி.மீ தூரத்துக்கு ரூ.2156 கோடியில் வெளி வட்ட சாலை  அமைக்கப்பட்டுள்ளது.இந்த  வெளி வட்ட சாலை ஒவ்வொரு பகுதிகள் வாரியாக படிப்படியாக திறக்கப்பட்டன. இந்த வெளி வட்டச் சாலையில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்கின்றன.  இந்த சாலையில் இது வரை கட்டணம் இன்றி வாகனங்கள் சென்று வந்தன. இந்த நிலையில் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் முடிச்சூர் அருகே வரதராஜபுரம், நசரத்பேட்டை அருகே கோலப்பன் சேரி, நெமி லிச்சேரி அருகே பாலவேடு, மீஞ்சூர் அருகே சின்ன முல்லை வாயில் ஆகிய 4 இடங்க ளில் சுங்கச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த 4 சுங்கச்சாவடி களிலும் திங்களன்று முதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தொடங்கியது. வாகனங்களுக்கு ஏற்றார்போல குறைந்தபட்சமாக ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.865 வரை கட்டணம் வசூலிக்கப் படுகிறது. வண்டலூரில் இருந்து மீஞ்சூருக்கு கார் சென்று வர  அதிகபட்சமாக ரூ.163 நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.