districts

கோயம்பேடு மலர் சந்தையில் பிளாஸ்டிக் பயன்படுத்திய 8 கடைகளுக்கு சீல்

அண்ணாநகர், மார்ச் 24- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த கூடாது என தமிழக அரசு அறிவு றுத்தியுள்ளது. அதேபோல் மஞ்சப்பை விற்பனை செய்ய  வேண்டும் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் கூறியுள் ளார். இதற்கிடையில், கோயம் பேடு மலர், பழம், காய்கறி, உணவு தானிய சந்தை யில் தீவிரமாக கடைப்பிடிக் கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் முதன்மை நிர்வாக குழு  அதிகாரி சாந்தி தலைமை யில் அதிகாரிகள் புதனன்று   கோயம்பேடு பூ மார்க் கெட்டில் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது,  பிளாஸ்டிக் கவர்களில்  பூக்களை விற்பனை  செய்வது கண்டுபிடிக்கப் பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 8 கடைகளை கண்டறிருந்து அந்த கடைகளை பூட்டி சிஎம்டிஏ அதிகாரிகள் அதிரடி யாக சீல் வைத்தனர். மேலும் 3 மாதங்களுக்கு இந்த 8  கடைகளும் செயல்பட தடை  விதிக்கப்பட்டு உரிமத்தை ரத்து செய்தனர். மேலும் நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் கூறினர்.