சென்னை, ஜூன் 6- பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து வெளிமாநில மீன்களை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் இருந்து கடலுக்கு சென்று பிடித்து வரும் மீன்களை மட்டுமே விற்பனை செய்வதற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மீன்களை விற்பனை செய்வ தற்கு தடை செய்யப்ப ட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த தடையானது வெகு நாளாக அமலில் இருப்பதா கவும் கூறப்படுகிறது. தற்போது காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் மீன்பிடி தடைகாலத்தின் காரணமாக பெரிய விசை படகுகள் கடலுக்குள் செல்ல இயலாத நிலையில், காசிமேடு வியா பாரிகள் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்தும், பல்வேறு மாவட் டங்களில் இருந்தும் மீன் களை வாங்கி கொண்டு வந்து காசிமேட்டில் விற் பனை செய்வதாகவும், அவ்வாறு வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து கொண்டுவந்த மீன்களை விற்பனை செய்வதால் மீன் களின் தரம் பாதிக்கப்படுவ தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் எதிரொலியாக பதப்படுத்தப்பட்ட மீன்களை விற்பனை செய்வதால் இந்த தடையானது காசிமேட்டில் அமலில் உள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வெளிமாநில மீன்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படும் என வும், மீன்கள் பறிமுதல் செய் யப்படும் எனவும் மீனவர் சங்கங்களின் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.