districts

போட்டித் தேர்வு மாணவர்களுக்கு நூலகத்தில் பயிற்சி

விழுப்புரம், ஜூன் 19-

     விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும்  கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவலூர் வட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சி கிளை நூலகத்தில் பல்வேறு போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி வகுப்பு நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் காலியாக உள்ள அரசுப் பணி யிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.  

    தற்பொழுது அரசு மற்றும் தனியார் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும்  மாண வர்கள் தமிழ்நாடு அரசு பொது நூலகங்களை அதிக அளவில் வருகின்றனர்.

    இதையடுத்து நூலகங்களை அதிகமாக பயன்படுத் தும் வாசகர்களின் பல்வேறு கோரிக்கைகளோடு தமிழ்நாட்டுப்பாடநூல் கழக பாட நூல்கள், போட்டித் தேர்வு களுக்கான வார, மாத மற்றும் பருவ இதழ்களை வழங்கும் படியும்  கேட்டுக்கொண்டனர்.

    இக்கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு பொது நூலகத்துறை இயக்குநர் கே.இளம் பகவத், குடிமைப்பணி பிரிவு உள்ள நூலகங்களுக்கு தமிழ்நாட்டுப் பாட நூல்கள் மற்றும் வார, மாத, காலாண்டிதழ்களை அனுப்பி வைக்க உத்தரவிட்டிருந்தார்.

    விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் குடிமைப்பணி பிரிவு உள்ள  நூலகங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவலூர் வட்டம் மணலூர்பேட்டை பேரூராட்சி கிளை நூலகமும் ஒன்று. இந்நூலகத்திற்கு விழுப்புரம் மாவட்ட மைய நூலகம் மூலம் தமிழ்நாட்டுப்பாட நூல்கள் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடநூல்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி தாமாகவே படித்து கடந்த முறை தேர்வு எழுதியவர்களில் பலர் அரசு பணிகளுக்கு தேர்வாகினர்.

    இந்நிலையில் இம்மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் வாசகர் வட்டத்துடன் இணைந்து  போட்டித் தேர்வு எழுதி பல்வேறு துறை களில் பணியாற்றும் தன்னார்வலர்கள் மூலம் பிரதி வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது

    எனவே டிஎன்பிசி மற்றும் பல்வேறு போட்டித் தேர்வெழுதும் மாணவர்களில் ஆர்வமுள்ளவர்கள் இந்நூலகத்தினை பயன்படுத்தி பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.