districts

img

கூட்டுறவு சங்க கட்டடத்தை விளாப்பாக்கத்தில் கட்ட வேண்டும்

திருவள்ளூர், நவ. 14- தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கட்டடத்தை விளாப்பாக்கத்தில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக சார்பில் ஆர்.ஆர்.கண்டிகை யில் வியாழனன்று (நவ 14), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருவள்ளூர் அருகில் உள்ள விளாப்பாக்கத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கட்டடத்தில்,  செயல்பட்டு வந்த  விளாப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விளாப்பாக்கம், ஆர்.ஆர்.கண்டிகை, அரும்பாக்கம், நந்தகோயில் திப்பை, பேரத்தூர், வதட்டூர், கோயம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். இந்த கட்டடத்தை மேம்பால பணியின் போது இடிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. இந்த நிலையில் திடீரென விளாப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கட்டடத்தை,  வெள்ளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட  ஆர்.ஆர்.கண்டிகையில் கட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விளாப்பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கட்டடத்தை வெள்ளியூர் ஊராட்சி யில் கட்ட கூடாது. ஏற்கெனவே வெள்ளி யூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வரு கிறது. மீண்டும் அதே ஊராட்சியில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கட்டடத்தை கட்டுவதை அனுமதிக் கூடாது என வலியுறுத்தி சிபிஎம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் விளாப்பாக்கம் ஊராட்சியில் சங்க கட்டடத்தை கட்ட இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. விளாப் பாக்கத்தில் கட்டடம் கட்ட வேண்டும் என ஊராட்சி கிராம சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சி யரிடம் தெரிவித்து போது சர்வே எண் 160/2 ல் கட்டிக் கொள்ள லாம் என்று ஆட்சியர் தெரிவித்தி ருந்த நிலையில், கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் அத்து மீறி ஆர்.ஆர்.கண்டிகையில் விளாப் பாக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, வியாழனன்று (நவ 14), அன்று ஆர்.ஆர்.கண்டிகையி லிருந்து ஊர்வலமாக சென்றனர். அப்போது 6 வழிச்சாலை பாலம் அருகே காவல்துறையினர் தடுத்து  நிறுத்தினர். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும், காவல்துறை யினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போராட்ட நோக்கங்களை விளக்கி பேசினர். ஆட்சியரிடம் மனு போராட்டத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தலை வர்கள் மனு அளித்தனர். அப்போது வேளாண் கூட்டுறவு சங்க துறை நிர்வாகத்துடன் பேசிய பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் விளாப்பாக்கம் கிளை செயலாளர் பி.கண்ணாயிரம் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.சம்பத், ஆர்.தமிழ்அரசு, வட்ட செயலாளர் எஸ்.கலையரசன், வட்ட குழு உறுப்பினர்கள் கே.முருகன், கே.விஜயகுமார், விசிக ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், விவசாயிகள் சங்க நிர்வாகி கோபு, வேட்டைக்காரன் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இ.கங்காதரன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகி ராமசாமி ஆகியோர் பேசினர்.