districts

img

வாலாஜா-நெமிலியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

ராணிப்பேட்டை, ஆக. 29 -  ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா மற்றும் நெமிலி ஊராட்சி ஒன்றியங்களில் புதனன்று (ஆக. 29) மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி நலத் திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இதில், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் வெங்கட்ராமன், பெ. வடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.