சூளகிரி, ஜூலை 23 சூளகிரி வட்டம் அழகு பாவி கிராமத்தில் உள்ள எம்.எம்.பஞ்சாபி தாபா, குரு பார்த்த பள்ளியில் உள்ள மகாராஷ்டிரா பஞ்சாபி தாபா உணவகங்களில் மதியம்,இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்று வந்துள்ளனர். இது குறித்து பலமுறை காவல் துறையினரும், வட்டாட்சியர் வழக்கு பதிவு செய்து சிறை தண்டனை பெற்றுத் தந்த போதும் தொடர்ந்து கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்று வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி ஆயத்தீர்வை துறை, சூளகிரி வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் முன்னிலையில் 2 பஞ்சாபி தாபா களையும் நிரந்தரமாக மூடி சீல் வைத்தனர்.