districts

img

உயர் மின் கோபுரங்கள் மீது ஏறி போராடும் சூழலை ஏற்படுத்தாதீர் மாநில அரசுக்கு விவசாயிகள் சங்க தலைவர்கள் வலியுறுத்தல்

 ராணிப்பேட்டை, அக்.16 -  உயர்மின் கோபுரங்கள்மீது ஏறி நின்று போராடவேண்டிய சூழலை ஒன்றிய, மாநில அரசுகள் ஏற்படுத்தவேண்டாம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின் கோபுரங்களால் பாதித்துள்ள விவ சாயிகளுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க மறுத்தால் 4ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது.  தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கும் ராணிப்பேட்டை விவசாயிகளுக்கு உயர்ந்த பட்ச இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்தில் 3ஆவது நாளாக  சனிக்கிழமை கால்நடைகளுடன் விவ சாயிகள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர்  துளசி நாராயணன் விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தரையில் நடக்கும் போராட்டத்தை உயர் மின் கோபுரங்கள் மீது நடத்தும் சூழலை ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. திருவண்ணாமலை, கோவை மாவட்டங்களில் மின் கோபுரங்கள் அமைத்த போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அந்த மாவட்ட நிர்வாகங்கள் வழங்கியது போன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயர்ந்தபட்ச இழப்பீடு  வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். காத்திருப்பு போராட்டத்த்தை ஆதரித்து  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ராணிப்பேட்டை மாவட்ட செய லாளர் ஆர்.திலகா, பொருளாளர் ஆர்.சங்கீதா, து.செயலாளர் எம்.உமாதேவி, ராணிப்பேட்டை சிஐடியு  மாவட்ட  தலைவர் ஆர்.வெங்கடேசன், செயலாளர் அ.தவராஜ், பொருளாளர் என்.ரமேஷ் ஆகியோர் பேசினர்.