tamilnadu

img

வறட்சி நிலவும் கொல்லாலக்குப்பம் பகுதியில் தடுப்பணை கட்டுக விவசாயிகள் சங்க தலைவர்கள் வலியுறுத்தல்

திருவள்ளூர்,நவ.21-  திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் உள்ளது கொல்லாலக்குப்பம் ஊராட்சி. இதன் அருகில் கேசவராஜகுப்பம், டி.டி.கண்டிகை, புண்ணியம் ஆகிய கிராமங்களில் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு மாங்கனி பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.  நெல், கரும்பு ஆகிய பயிர்களையும் இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதி யில் கடந்த நான்கு  ஆண்டுகளாக மழை பொய்த்துப் போனதால் ஏறக்குறைய 600 ஏக்கரில் விளைச்சல் செய்த மா மரங்கள் காய்ந்தன.மேலும் 400ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெல், 350க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பும் தண்ணீர் இல்லாமல் கருகி யுள்ளது.இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர். வறட்சியை சமாளிக்க கொல்லாலக்குப்பம் கிராமத்தில் கடந்த 1980ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குப்பிரெட்டி குளத்தில் சில ஆண்டுகளிலேயே உடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 2003ஆம்  ஆண்டில் அணை கட்ட பொதுப்பணித்துறையி னர் ஆய்வு மேற்கொண்டனர்.அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை.400அடி ஆழம் சென்றாலும் பூமியில் தண்ணீர் இல்லை.அந்த அளவிற்கு வறட்சி நிலவுகிறது. கொல்லாலக்குப்பம் கிராமத்தில் கெவிக்குன்று, மலை, சாரபாறை மலை, மூனுகுப்பை மலை, வல்வால் பாறை மலை ஆகிய நான்கு மலைகள் உள்ளன.இங்கு ஆண்டுக்கு நான்கு மாதங்கள் பருவ  காலத்தில் வரும் மழை தண்ணீர் அருகில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கலந்து வீணாக செல்கிறது. மலைகளிலி ருந்து வரும் தண்ணீரை சேமிக்க நான்கு மலைகளின் அடிவாரத்தில் சுமார் 160 அடி அகலத்திற்கு அணை கட்டி விவசாயத்தையும், குடிநீர் பஞ்சத்தையும் போக்கமுடியும்.  டிசம்பர்-2ல் திருத்தணியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்                                                                                                                                                                                                                                                                                                                                                                                           இந்த கோரிக்கையை வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரும் டிசம்பர் 2 அன்று திருத்தணியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள னர். முன்னதாக தடுப்பணை கட்டடுவதற்கு பொருத்தமான இடத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்டப் பொருளாளர் சி.பெருமாள், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ஜெயச்சந்திரன், விவசாயி தேவன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.