districts

img

பாமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பின் போது பாஜக தொண்டர்கள் மோதல்

கடலூர், மார்ச் 30- கடலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் இயக்கு நர் தங்கர்பச்சான் வேட்பாளராக போட்டியி டுகிறார்.  கடலூர் முதுநகர் அஞ்சலை அம்மாள் சிலை அருகே பாஜக தலைவர் அண்ணா மலை தங்கர் பச்சானுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருந்தார். அதனை முன்னிட்டு அங்கு வந்த தங்கர் பச்சான் அண்ணாமலை வருவதற்கு தாமதமான தால் அப்பகுதியில் கடைவீதிகளில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்பொழுது பாஜகவை சேர்ந்த இளைஞர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்த வாய் தகராறு மோதலாக மாறிய நிலையில் ஒருவருக்கொருவர் தாக்கிக்  கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால் வேட்பாளர் தங்கர் பச்சான் மோதலை கண்டு கொள்ளாமல் வாக்கு சேகரிப்பதில் ஈடுப்பட்டார்.பாமக வேட்பாளர் முன்னிலையில் பாஜகவினர் தாக்கி கொண்ட சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் அண்ணாமலை வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது வேனிற்கு முன்பாக யார் நிற்பது என்ற போட்டியில். பாமக பாஜக தொண்டர்கள் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனை அண்ணாமலை சமரசம் செய்து வைத்து பின்னர் பிரச்சாரத்தை தொடர்நது நடைபெற்றது.