சென்னை, ஆக,11-
வண்டலூர் அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் கட்டப் பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் அடுத்த மாதம் 2வது வாரம் திறக்கப்படு கிறது.
சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வண்டலூரில் இருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்திலும், ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது. கிளாம் பாக்கம் பேருந்து நிலையம் கட்டும் பணி 2019, பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமார் 88 ஏக்கர் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் கட்டப் பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்திற்கு 2,000 பேருந்துகள் வந்து செல்லும் வகையில், 270 கார்கள், 3,500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் கட்டு மானங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாநகரப் பேருந்துகள் கிளாம் பாக்கம் புதிய பேருந்து நிலை யத்திற்கு வந்து செல்லும் வகையில் தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந் நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தற்போது 99 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் செப்டம்பர் 2வது வாரத்தில் திறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.