சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு வடசென்னை மாவட்ட அமைப்புக் கூட்டம் ஆர்.மணிமேகலை தலைமையில் செவ்வாயன்று (பிப். 21) ஓட்டேரியில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் சு.லெனின் சுந்தர், உழைக்கும் பெண்கள் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எம்.டெய்சி ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஆர்.மணிமேகலை உள்ளிட்டு 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.