புதுச்சேரி அடுத்துள்ள திருவாண்டார் கோவில் பகுதியில் இயங்கி வரும் டிடிகே ஹெல்த் கேர் நிறுவனத்தில் சிஐடியு தொழிலாளர் நலச் சங்க துவக்க விழா செயல் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநில உதவித் தலைவர் கே.முருகன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். மாநிலச் செயலாளர் ஜி.சீனுவாசன் பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் நிர்வாகிகள் ராஜ்குமார், தினேஷ்குமார், ஞானப்பிரகாசம், விஜயன், பாரதிதாசன், ரவிச்சந்திரன், சிவக்குமார், ரமேஷ், ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.