திருவள்ளூர், பிப் 6- வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணி யாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிறுவ னத்தின் தொழிலாளர்கள் என கணக்கிட வேண்டும், நிறுவனத் தொழில் என்று சொன்னால் நிரந்தர தொழிலாளி என்று தான் அர்த்தம் என உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துள்ளது என்று சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகில் உள்ள வல்லூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன் செவ்வாயன்று (பிப் 6) தொழிலாளர் கள் மத்தியில் பேசுகையில், ஒப்பந்த தொழிலாளர் முறையை கூட முறையாக நடத்தாமல், பித்தலாட்டம் செய்கிறது வல்லூர் அனல் மின் நிலைய நிர்வாகம். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என சிஐடியு சட்ட ரீதியாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறது. தொழி லாளர் நலத்துறையில் சட்ட ரீதியாகவும் போராடி வருகிறோம். வல்லூர் அனல் மின் நிலையம் தனியார் நிறுவனம் அல்ல, ஒன்றிய அரசும் மாநில அரசும் சேர்ந்து நடத்துகிற பொதுத்துறை நிறுவனமாகும். இதில் யார் முன்கை எடுத்து நடத்துவது என்ற கேள்வி எழுகிறது. அதிக முதலீடு செலுத்திய நிறுவனம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நிர்வாகம் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. உயர்நீதி மன்றத்தில் தொழிலாளிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. ஏனென்றால் 2000 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்ய சட்டரீதியாக தொழில்துறையில் அனுமதி பெற்று அதற்கான லைசன்ஸ் பெற வேண்டும். அப்படி எதுவும் நிர்வாகம் பெற வில்லை. எனவே சட்டவிரோத ஒப்பந்த தொழி லாளர்களை வைத்து, வல்லூர் அனல் மின் நிலைய நிர்வாகம் வேலை வாங்குகிறது. இது சட்ட விரோத ஒப்பந்த தொழில்முறை யாகும். ஒப்பந்த தொழிலாளர்கள் என இவர்களை கணக்கிட கூடாது, இவர்கள் நிறுவனத்தின் தொழிலாளர்கள் என கணக்கிட வேண்டும் என சட்டம் சொல்கிறது. நிறுவனத் தொழில் என்று சொன்னால் நிரந்தர தொழிலாளி என்று தான் அர்த்தம். அவர்கள் நிறுவன தொழிலாளர்கள் என உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் நகல் அடுத்த ஓரிரு நாட்களில் வந்து விட்டால் அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். டெல்லியில் உள்ள அதிகாரிகளை சிஐடியு அகில இந்திய நிர்வாகிகள் சந்தித்து இந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துவார்கள். தேசிய அனல்மின் நிறுவனத்துடன் பேச்சு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் சுகுமாறன். இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், மாவட்ட துணை நிர்வாகிகள் சலில்குமார், சதிஷ் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.