districts

img

வல்லூர் அனல் மின் நிலைய 2000 ஒப்பந்த தொழிலாளர்களையும் பணிநிரந்தரம் செய்க

திருவள்ளூர், செப் 15- என்டிஇசிஎல் வல்லூர் அனல் மின் நிலையத்தில் கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக பணியாற்றி வரும் 2000 ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும், நிரந்தர தொழி லாளர்கள் என தமிழ்நாடு அரசு  அறிக்க வேண்டும் என சிஐடியு  தமிழ்நாடு மாநிலத் தலைவர்  அ.சவுந்தரராசன் வலியுறுத்தி யுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகில் உள்ள வல்லூரில் தேசிய அனல் மின் கழகம் 50 விழுக்காடு மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் 50 விழுக்காடு பங்குகள் என இரண்டும் இணைந்து என்டிஇசிஎல் அனல் மின் நிலையத்தில் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 2000  தொழிலாளர்கள், ஒப்பந்த தொழி லாளர்களாகவே பணியாற்றி வரு கின்றனர். ஒருவரையும் இதுவரை நிர்வாகம் பணி நிரந்தரம் செய்யப் பட்டவில்லை. குறைந்த கூலியை  பெற்றுக்கொண்டு தான் தொழி லாளர்கள் மின் உற்பத்தியில் ஈடுபட்டு  வருகின்றனர். தமிழ்நாடு அரசின் கட்டுப் பாட்டில் உள்ள தொழிற்சாலைத் துறை,  ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து வேலை செய்வதற்கான உரிமம் இல்லாமலும், பதிவு சான்றிதழ் இல்லாமலும் சட்ட  விரோதமாக வேலை வாங்கப்படு கிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் செப்டம்பர் 6 அன்று பேட்ஜ் அணிந்து போராட்டம்,  செப் 9 அன்று மீஞ்சூர் பஜாரில் கோரிக்கைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் எந்த அசைவும் இன்றி உள்ளது. இதனை தொடர்ந்து செப் 15 அன்று உண்ணாநிலை போராட்டத்தை துவங்கியுள்ளது

இந்த போராட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் துவங்கி வைத்து பேசுகையில், ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக் கைகளை முன்னுரிமை கடமையாக ஏற்று சிஐடியு போராடி வருகிறது. ஒப்பந்த தொழிலாளர்களை பாது காக்க வகுக்கப்பட்டுள்ள சட்டங் களை அமலாக்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றோம். இதற்காக அக்டோபர் 3 அன்று அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் இணைந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறவுள்ளது. என்டிஇசிஎல் வல்லூர் அனல்  மின் நிலையத்தை பொருத்தமட்டில் இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 70 விழுக்காடு தமிழ் நாட்டிற்கும், மற்ற 30 விழுக்காடு பாண்டிச்சேரி, ஆந்திர, கர்நாடகம், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் பயன் பெறுகிறது. இப்படி மக்களின்  நலனுக்காக இரவு பகல் என்று பாராமல் 10 ஆண்டுகளாக உழைத்து  வரும் 2000 ஒப்பந்த தொழிலாளர் கள் அனைவரையும் நிரந்தர தொழிலாளர்கள் என தமிழ்நாடு அரசு அறிக்க வேண்டும். தேசிய அனல் மின் நிலையத்தி லிருந்து பணியாற்ற வந்த 300 அதிகாரிகளுக்கு ரூ. 104 கோடி செல விடுகிறது. இந்த  ஒப்பந்த தொழி லாளர்களுக்கு வெறும் ரூ.48 கோடி  வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒப்பந்த தொழிலாளர்களை அடி மைபோல் நடத்தும் நிர்வாகத்திற்கு எதிராக கண்டனம் எழுந்துள்ளது. இதையொட்டி துவக்கப்பட்ட உண்ணாநிலை போராட்டம் 15 நாட்கள் தொடர்ந்தது நடைபெற உள்ளது. இதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால், அடுத்த  கட்டமாக வேலை நிறுத்த போராட்ட மாக மாறும். இந்நிலையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார். போராட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஜி.வினாயகமூர்த்தி, எஸ்.நரேஷ் குமார், வடசென்னை அனல் மின்  நிர்வாகிகள் இ.ஜெயவேலு, சலில் குமார், கிளை நிர்வாகிகள் சதிஷ், பிரபாகரன் உள்ளிட்ட பலர் பேசி னர்.