districts

சாலை விபத்தில் தொழிலாளி பலி: சிஐடியு தலைவர்கள் இரங்கல்

கிருஷ்ணகிரி, செப்.9- பரமக்குடியை சேர்ந்த தோழர் செந்தில் மனோகரனின் அகால மரணத்திற்கு சிஐடியு தலைவர்கள்  இரங்கல் தெரிவித்துள்ளனர். 1981 ஆம் ஆண்டு ஓசூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த செந்தில் மனோகரன், சிஐடியு நிர்வாகியாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலக மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினராக பணியாற்றினார். இந்த நிலையில், 2015 இல் விருப்ப ஓய்வு பெற்ற அவர்,  சொந்த ஊருக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தார். அங்கும் கட்சியோடு இணக்கமாக இருந்து வந்தார். இந்நிலையில் செப். 7 அன்று ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு குடும்பத்துடன் காரில் சென்ற  போது உச்சிப்புளி பகுதி பிரப்பன் குளம் அருகே நிகழ்ந்த விபத்தில் செந்தில் மனோகரன், அவரது துணை வியார் அங்காள ஈஸ்வரி,பேரக்குழந்தைகள் ராஜேஷ் பிரணவிகா, தர்ஷன் ராணி ஐவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்தில் செந்தில் மனோகரன் மகள் மட்டுமே படுகாயத்துடன் உயிர் பிழைத்தார். இந்த செய்தி அறிந்த ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட  சிஐடியு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.