districts

img

வல்லூர் அனல் மின்நிலையத்தில் தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் சிஐடியு

கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில்அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகில் வல்லூர் ஊராட்சி எல்லைக்குட் பட்டு 1124 ஏக்கர் பரப்பளவில் வல்லூர் அனல் மின்நிலையம் அமைந்துள்ளது.  தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி) 50 விழுக்காடு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் (டிஏஎன்ஜி இடிசிஓ), ஆகிய நிறுவனங்களின் சரிபாதி பங்குதாரர்களாக இருக்கிறது. ரூ.8500 கோடி முதலீட்டில் 2011 ம் ஆண்டு இந்த மின்நிலையம் துவங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 1500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.   திருவள்ளூர் மாவட்டத்தை சுற்றியுள்ள கொண்டக்கரை,அத்திப்பட்டு, வல்லூர், குருவிமேடு, சுப்பாரெட்டிபாளையம், மேலூர், காட்டுப்பள்ளி, எண்ணூர், மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொறியாளர்கள், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், பள்ளிப்படிப்பை முடித்த  தொழிலாளர்கள் என 2000 கும் மேற்பட்டோர் கடந்த 11 ஆண்டுகளாக பணி யாற்றி வருகின்றனர். மின்நிலையத்தில் நிரந்தர பணியாளர்கள் பணிபுரியும் இடத்திலும், ஆபத்தான மற்றும் மாசு நிறைந்த இடத்திலும் வெப்பம் மிகுந்த சூழலில் கடினமான பணியை இவர்கள் ஏற்றுள்ளனர். ஆனால் அப்படிபட்ட  தொழிலாளர்களில் எவரும் இதுவரை  பணி நிரந்தரம் செய்யப்பட வில்லை. ஒப்பந்த தொழிலாளர்களாகவே அவர்கள் நீடிக்கின்றனர்.
தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் 
 இங்கு பராமரிப்பு மற்றும் இயக்குதல் பணிகளை பார்ப்பதற்கு யுடிலிட்டி பவர் டெக் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் NTPC ஓய்வு பெற்ற அதிகாரிகள் இணைத்துக் கொண்டுள்ளனர். யுபிஎல் நிறுவனம் என்டிஇசிஎல் நிறுவனத்துடன் ரூ.100 மதிப்புள்ள பத்திரத்தில் ஒப்பந்த தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்று வேலை வாங்கிட நொய்டாவில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் அனைத்து அனல்  மின் நிலைய பணிகளையும் மேற்கொள்வ தாக ஒப்புக்கொண்டுள்ளது. தொழிலாளர்க ளுக்கு உண்டான ஊதியம் மற்றும் சலுகை களை NTECL நிர்வாகம் கொடுப்பதை பெற்று, யுபிஎல் நிறுவனம் தனது தொழி லாளர்களுக்கு வழங்கி வந்தது. சில  உள்ளூர் ஆட்கள் உதவியுடன் தொழிலா ளர்களை மிரட்டி வைத்திருந்தனர்.  தொழி லாளர்களுக்கு மாநில அரசின் குறைந்த பட்ச ஊதியத்தை மட்டும் வழங்கி வந்தனர். 
சிஐடியு கிளை உதயம்
இந்நிலையில் 2014ல்  தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) வடசென்னை கிளை அமைக்கப்பட்டது. தொழிலாளர்களின் கோரிக்கைள் தொடர்பாக தொழிலாளர் துணை ஆணை யர் முன்பு தொழிற்தாவா எழுப்பப்பட்டது.தொழிற்தாவா நிலுவையில் உள்ள போது தொழிலாளர்களை பணி நீக்கம்  செய்வதற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் தடைஉத்தரவு பெறப்பட்டது. இதனால் தொழிலாளர்களை வரை முறையின்றி பணியை விட்டு நிறுத்துவது  தடுக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்க ளுக்கு அச்சம் நீங்கியது. தொழிற்தாவா நிலுவையில் இருக்கும் போது, பணி நிலையில் எந்த மாற்றமும் கொண்டுவரக் கூடாது என்று முறையிடப்பட்டது. இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர் என்ற முறையில் நிர்வாகம் பணி வழங்கியது.
முதல் வேலைநிறுத்தம் 
தொழிலாளர் துணை ஆணையர் முன்பு தொழிற்தாவா எழுப்பப்பட்டதால் ஊதிய உயர்வு அளிக்க முடியாது என்று நிர்வாகம் அறிவித்து விட்டது. தொழிற் சாலை இணை இயக்குநரகத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்கப்பட்டபோது யுபிஎல் நிறுவனம் முதன்மை நிர்வாகியாக பதிவு செய்து கொண்டது தெரியவந்தது. இது ஒப்பந்த தொழிலாளர் சட்டம் 1970 ன்படி தவறானது என்று புகார் எழுப்பியதன் அடிப்படையில் தொழிற்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஒன்றிய அரசின் அறிவிக்கை அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கக் கோரி முதன் முதலில் வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
பணிந்தது நிர்வாகம் 
அப்போது பொன்னேரி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த் தையில் என்டிஇசிஎல்  நிர்வாகம் எதையும் ஏற்க மறுத்து விட்டது. அடுத்து நடைபெற்ற போராட்டத்தால், ஒன்றிய அரசின் ஊதியம் வழங்குவதை நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஆனால் வழங்கவில்லை. மீண்டும் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. தொழி லாளர் இணை ஆணையாளர் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிர்வாகம்  மாநில அரசின் ஊதியம் தான் வழங்க வேண்டும் என்றாலும் ஒன்றிய அரசின் ஊதியத்தையும் வழங்குவதற்கும் ஒப்புக் கொண்டது. ஊதியம் வழங்கக்கோரி 2017 ஆம் ஆண்டு ஒரு வேலை நிறுத்தம்  நடைபெற்றது. இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நீடித்தது. வேலை நிறுத்த முடிவில் ஊதியம் வழங்கிட தேதி குறிப்பிட்டு நிர்வாகம் அமல்படுத்த ஆரம்பித்தது. அடுத்த ஆண்டு வழங்க முடியாது என்று நிலை முறியடிக்கப்பட்டது.  சிஐடியு சங்க புகாரின் அடிப்படையில் திருவொற்றியூரில் உள்ள தொழிற்சாலை இணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். 6.7.2018 அன்று யுபிஎல் நிறுவனம் முதன்மை நிர்வாகியாக பதிவு செய்து கொண்டதை தொழிலாளர் இணை இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும்  சுகாதாரம்- திருவொற்றியூர்) நிராகரித்து விட்டார். அதற்கு முன்னதாக தொழி லாளர்களை நிரந்தரப்படுத்தும் சட்டம் 1981 அடிப்படையில் நிரந்தரம் கோரும் மனுவை சிஐடியு சங்கம் சமர்ப்பித்தது.

ஒப்பந்த தொழிலாளர் உரிமம் இல்லாமல் யுபிஎல் நிறுவனம் 2018 முதல் பணியளித்தது சட்ட விரோதமானது என அந்த நிறுவனத்தின் மீது இணை இயக்குநர் வழக்கும் தொடர்ந்துள்ளார். இதற்கிடையே 2021 மார்ச்சில் ஊதிய உயர்வுக்கான போராட்டம் தீவிர மடைந்து தன்னெழுச்சியாக வேலை நிறுத்தம் உருவானது. அப்போது சட்ட மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் வேலை நிறுத்தம் 6 நாட்கள் மட்டுமே நடை பெற்றது. அதன் பின்னர் நிர்வாகம் அளித்த வாக்குறுதியின் பேரில், வேலை  நிறுத்தம் திரும்பபெறப்பட்டது. சட்ட மன்ற தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்தது.தொழிலாளர்கள் ஆட்சி மாற்றத்தை ஆவலுடன் எதிர்நோக்கினர். எனினும் ஊதிய உயர்வு போன்ற எந்த  முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து மாநில அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.தொடர் வேலை நிறுத்தம் காரணமாக என்டிஇசிஎல் நிர்வாகம் முதன்முதலாக அலவனஸ் கொடுக்க முன்வந்தது.  இதற்கிடையில் தொழிற்சாலை இணை இயக்குநர் அலுவலகத்தில் 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வழக்கு நடைபெற்று வருகிறது. சட்ட விரோதமாக இயங்கி வந்த யுபிஎல் ஒப்பந்த நிறுவனம் வெளியேற்றப்பட்டுள்ளது.  அனல் மின் நிலையத்திற்கு உள் நாட்டிலிருத்தும், வெளி நாட்டிலிருந்தும் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது.  நிலக்கரியை எரிப்பதால் கிடைக்கும் ஈர சாம்பல் ஒரு டன்னுக்கு ரூ.125, உலர் சாம்பல் (சிமெண்ட் ஆலைகளுக்கு) ஒரு டன் ரூ.1250 க்கும் விற்பனை செய்யப்படு கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 500 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.இதனை முழுவதும் சுற்றியுள்ள கிராமங்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும். தொடர்ச்சியான தலையீடு மற்றும் போராட்டத்தால் NTECL நிர்வா கத்தின் அதிகாரிகள் மத்தியில் சிஐடியு பலம் பொருந்தியது சங்கம் என்பதை நிரூபிப்போம்.