பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சென்னை மண்டலம் சார்பில் எம்.தனலட்சுமி தலைமையில் திருச்சி நோக்கி பயணிக்கும் நடை பயண பிரச்சார குழுவிற்கு மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் எம்.ரவிசங்கர் தலைமையில் ஆவடி பேருந்து பணிமனையில் வரவேற்பளிக்கப்பட்டது. இதில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், வடசென்னை மாவட்டத் தலைவர எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் சு.லெனின்சுந்தர், பொருளாளர் வி.குப்புசாமி, துணைத் தலைவர் ஆர்.ரவிச்சந்திரன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பகத்சிங்தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.