திருவள்ளூர், ஏப். 18- கும்மிடிப்பூண்டியில் ஆட்டோ நிறுத்தத்தில் பெயர் பலகையை அப்புறப் படுத்திய தொழிலதிபருக்கு ஆதரவாக செயல்படும் காவல் துறைக்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது. கும்மிடிப்பூண்டி மார்க்கெட் அருகில் ஆட்டோ நிறுத்தத்தில் கடந்த வாரம் பெயர் பலகை மற்றும் கொடி கம்பம் நிறு வப்பட்டது. இந்த பெயர் பலகையை சிலர் பிடுங்கி எரிந்துள்ளனர். இது குறித்து டவுன் காவல் நிலையத்தில் சிஐடியு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் திங்க ளன்று (ஏப்-17) பிடிங்கி எரிந்த இடத்தி லேயே மீண்டும் பெயர் பலகை நிறுவ ஆட்டோ சங்கத்தின் சார்பில் நட வடிக்கை மேற்கொண்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குணசேகர், பிரபல துணிக்கடை உரிமையாளருக்கு ஆதரவாக சிஐடியு பெயர் பலகை நடக் கூடாது, வரு வாய் துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆட்டோ சங்கம் ஏற்கனவே பதிவு பெற்ற சங்கம் தான். அதுவும் ஏற்கனவே பெயர் பலகை இருந்த இடத்தில் தான் நடுகிறோம் என தலைவர்கள் தெரி வித்தனர்.
தங்கள் விளம்பரம் பதித்த இரும்பு தடுப்புகளை எந்த அனுமதியும் இன்றி சாலையில் வைக்கும் முதலாளிகள் மீது நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர், மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் ஆட்டோ தொழிலாளர்கள் சாலையில் ஓரமாக பெயர் பலகை வைப்பதற்கு மட்டும் எதிர்க்கின்றனர். அப்பாவி தொழிலாளர் மீது மட்டும் சட்டம் பாய்கிறது என கண்டித்தனர். பின்னர் காவல்துறையினர் பின்வாங்கவே, குறிப்பிட்ட அதே இடத்தில் பெயர் பலகையை நிறுவினர். இதில், விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.துளசிநாராயணன், திரு வள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சந்திர சேகரன், ஒன்றியச் செயலாளர் nஜெ. ஆனந்தன், மாவட்ட துணைத் தலைவர் பரமசிவம், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் கே.அர்ஜூனன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சூரியபிரகாஷ், ஆட்டோ சங்கத்தின் கிளைச் செயலாளர் எம்.துலுக்காணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.