districts

img

சிஐடியு நிர்வாகி எஸ்.சந்தானம் பணி ஓய்வு

சென்னை, ஜூலை 1 - சிஐடியு மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் எஸ்.சந்தானம் எல்ஐசி பணியில் இருந்து வியாழனன்று (ஜூன் 30) ஓய்வு பெற்றார். 1989ம் ஆண்டு எல்ஐசி - திருவொற்றியூர் கிளையில் பணிக்கு சேர்ந்த எஸ்.சந்தானம், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தில் (ஐசிஇயு) - ஏஐஐஈஏ இணைந்தார். 1990 களில் சங்கத்தின் சென்னை கோட்டம்-2 உருவாக்கப்பட்ட போது, அதன் முதல் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட் டார். தென்மண்டல  இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர், ஏஐஐ இஏ-வின் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்தார். தற்போது சிஐடியு மத்திய சென்னை மாவட்ட பொருளாளராகவும் செயல்பட்டு வரு கிறார். எல்ஐசி-யில் 33 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற அவருக்கு ஜூன் 30 அன்று பாராட்டு விழா நடைபெற்றது. காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி -1ன் தலைவர் ஜி.ஜெய ராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் கே.சுவாமி நாதன், பொதுச் செயலாளர் டி.செந்தில்கு குமார், சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, சென்னை பகுதி - 1ன் பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ் குமார், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் எஸ்.ரமேஷ்குமார், இணைச் செயலாளர்கள் டி.ரமேஷ், கே.விஜயலட்சுமி உள்ளிட்டோர் பேசினர். இந்த நிகழ்வில், மாணவர் சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஐசிஇயு-1 ஆகிய அமைப்புகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் சந்தானம் நன்கொடை வழங்கினார்.