கனமழை காரணமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், மழைநீர் தேங்குவதை தொடர்ந்து, மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர், மாவட்ட ஆட்சியர் சி.பழனி, தலைமையில் ஆக.14 அன்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.லட்சுமணன், அன்னியூர் அ.சிவா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதம சிகாமணி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) நாராயணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு உட்பட பலர் உடனிருந்தனர்.